Saturday, January 26, 2013

இலக்கணம் மாறுது

இந்த ஊரின் 
இங்கிதம் தெரியாமல் 
கதவின் 
ரேகை அறியா பாகத்தில் 
சிறுகை பதித்து
பிளந்து
அத்துமீறி முகம் நுழைத்து 
 புன்னகை காட்டிய 
இரண்டடிக் கவிதை ஒன்று..
இழுத்து வந்து 
அறிமுகம் செய்தது..
ஓராண்டாய்
அடுத்த வீட்டில் 
குடியிருக்கும் 
அதன் அம்மாவை.

No comments: