Thursday, February 21, 2013

நீயென்று உணர்

உடல் பதற 
அலறி விரையும் 
நூற்றியெட்டு..

தொடர்கிறது 
மிருகம்..
விலகுகிறது 
மனிதம்..
பிரார்த்திக்கிறது 
தெய்வம்..

Wednesday, February 13, 2013

புன்னகை


கூந்தல் உச்சி
நெற்றிச் சரிவு 
புருவ வளைவு 
விழி விசை
கன்னக் குழி..

கிறங்கி 
இறங்கி 
தவறி
கடந்து 
விழுந்து..

வெடவெடத்து
விறுவிறுத்து
நினைவு மீண்டு
நிதானித்து..

நாசி மேட்டில் 
இளைப்பாறி      
இதழ்களில்
எழுதிச் சென்ற 
வரிகளில்
உருவான கவிதை.

Monday, February 11, 2013

ஈர்ப்பு


அகலத் தாள் மீது
கொட்டிய
எண்ணத் துணுக்குகளாய்
பரவிக் கிடந்த
என்னை,
தள்ளி நின்றே
திசை திருப்பி
ஒருமுகப்படுத்தி
ஒன்று கூட்டி
ஆறடிக் கவிதையாய் விரித்த
காந்தமே,
விலகிவிடாதே!
சிதறிவிடுவேன்!