Wednesday, February 13, 2013

புன்னகை


கூந்தல் உச்சி
நெற்றிச் சரிவு 
புருவ வளைவு 
விழி விசை
கன்னக் குழி..

கிறங்கி 
இறங்கி 
தவறி
கடந்து 
விழுந்து..

வெடவெடத்து
விறுவிறுத்து
நினைவு மீண்டு
நிதானித்து..

நாசி மேட்டில் 
இளைப்பாறி      
இதழ்களில்
எழுதிச் சென்ற 
வரிகளில்
உருவான கவிதை.

No comments: