Monday, February 11, 2013

ஈர்ப்பு


அகலத் தாள் மீது
கொட்டிய
எண்ணத் துணுக்குகளாய்
பரவிக் கிடந்த
என்னை,
தள்ளி நின்றே
திசை திருப்பி
ஒருமுகப்படுத்தி
ஒன்று கூட்டி
ஆறடிக் கவிதையாய் விரித்த
காந்தமே,
விலகிவிடாதே!
சிதறிவிடுவேன்!

1 comment:

bams said...

aha :)